அரசியல்

53. சுற்றந்தழால்

( உறவினரை அரவணைத்து வாழ்தல் )

521. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
        சுற்றத்தார் கண்ணே யுள.

522. விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா
        வாக்கம் பலவுந் தரும்.

523. அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
        கோடின்றி நீர்நிறைந் தற்று.

524. சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
        பெற்றத்தாற் பெற்ற பயன்.

525. கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய
        சுற்றத்தாற் சுற்றப் படும்.

526. பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
        மருங்குடையார் மாநிலத் தில்.

527. காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு
        மன்னநீ ரார்க்கே யுள.

528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி
        னதுநோக்கி வாழ்வார் பலர்.

529. தமராகிக் தற்றுறந்தார் சுற்ற மமராமைக்
        காரண மின்றி வரும்.

530. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த
        னிழைத்திருந் தெண்ணிக் கொளல்.