அரசியல்

52. தெரிந்து வினையாடல்

( தேர்ந்து தெளிந்தபின் அவர்மூலம் வினைகளை செய்வித்தல் )

511. நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்த
        தன்மையா னாளப் படும்.

512. வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
        யாராய்வான் செய்க வினை.

513. அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கு
        நன்குடையான் கட்டே தெளிவு.

514. எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்
        வேறாகு மாந்தர் பலர்.

515. அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
        சிறந்தானென் றேவற்பாற் றன்று.

516. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
        டெய்த வுணர்ந்து செயல்.

517. இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந்
        ததனை யவன்கண் விடல்.

518. வினைக்குரிமை நாடிய பின்றை யவனை
        யதற்குரிய னாகச் செயல்.

519. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
        நினைப்பானை நீங்குந் திரு.

520. நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
        கோடாமை கோடா துலகு.