அங்கவியல்

78. படைச்செருக்கு

( படைவீரன் கொள்ளும் பெருமித உணர்வு )

771. என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
        முன்னின்று கன்னின் றவர்.

772. கான முயலெய்த வம்பினில் யானை
        பிழைத்தவே லேந்த லினிது.

773. பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கா
        லூராண்மை மற்றத னெஃகு.

774. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
        மெய்வேல் பறியா நகும்.

775. விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி
        னொட்டன்றோ வன்க ணவர்க்கு.

776. விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
        வைக்குந்தன் னாளை யெடுத்து.

777. சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்
        கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

778. உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
        செறினுஞ்சீர் குன்ற லிலர்.

779. இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
        பிழைத்த தொறுக்கிற் பவர்.

780. புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
        டெரந்துகோட் டக்க துடைத்து.