அங்கவியல்

90. பெரியாரைப் பிழையாமை

( பெரியோரிடம் பிழைபட நடந்துகொள்வோர்க்கு வரும் கேடு )

891. ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
        போற்றலு ளெல்லாந் தலை.

892. பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
        பேரா விடும்பை தரும்.

893. கெடல்வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி
        னாற்று பவர்க ணிழுக்கு.

894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
        காற்றாதா ரின்னா செயல்.

895. யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
        வேந்து செறப்பட் டவர்.

896. எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார்
        பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

897. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னாந்
        தகைமாண்ட தக்கார் செறின்.

898. குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
        நின்றன்னார் மாய்வர் நிலத்து.

899. ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து
        வேந்தனும் வேந்து கெடும்.

900. இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார்
        சிறந்தமைந்த சீரார் செறின்.