981. கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து
       
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
982. குணநலஞ் சான்றோர் நலனே பிறநல
       
மெந்நலத் துள்ளதூஉ மன்று.
983. அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
       
டைந்துசால் பூன்றிய தூண்.
984. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
       
சொல்லா நலத்தது சால்பு.
985. ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர்
       
மாற்றாரை மாற்றும் படை.
986. சால்பிற்குக் கட்டளை யாதெனிற் றோல்வி
       
துலையல்லார் கண்ணுங் கொளல்.
987. இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா
       
லென்ன பயத்ததோ சால்பு.
988. இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுந்
       
திண்மையுண் டாகப் பெறின்.
989. ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்
       
காழி யெனப்படு வார்.
990. சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான்
       
தாங்காது மன்னோ பொறை.