அங்கவியல்

106. இரவு

( பிறரிடம் யாசித்தல் )

1051. இரக்க விரத்தக்கார்க் காணிற் கரப்பி
          னவர்பழி தம்பழி யன்று.

1052. இன்ப மொருவற் கிரத்த லிரந்தவை
          துன்ப முறாஅ வரின்.

1053. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
          றிரப்புமோ ரேஎ ருடைத்து.

1054. இரத்தலு மீதலே போலுங் கரத்தல்
          கனவிலுந் தேற்றாதார் மாட்டு.

1055. கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
          றிரப்பவர் மேற்கொள் வது.

1056. கரப்பிடும்பை யில்லாரைக் காணி னிரப்பிடும்பை
          யெல்லா மொருங்கு கெடும்.

1057. இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ள
          முள்ளு ளுவப்ப துடைத்து.

1058. இரப்பாரை இல்லாயி னீர்ங்கண்மா ஞால
          மரப்பாவை சென்றுவந் தற்று.

1059. ஈவார்க ணென்னுண்டாந் தோற்ற மிரந்துகோண்
          மேவா ரிலாஅக் கடை.

1060. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
          தானேயுஞ் சாலுங் கரி.