1101. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு
         
மொண்டொடி கண்ணே யுள.
1102. பிணிக்கு மருந்து பிறம னணியிழை
         
தன்னோய்க்குத் தானே மருந்து.
1103. தாம்வீழ்வார் மென்றோட்டுயிலி னினிதுகொ
         
றாமரைக் கண்ணா னுலகு.
1104. நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந்
         
தீயாண்டுப் பெற்றா ளிவள்.
1105. வேட்ட பொழுதி னவையவை போலுமே
         
தோட்டார் கதுப்பினா டோள்.
1106. உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
         
கமிழ்தி னியன்றன தோள்.
1107. தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றா
         
லம்மா வரிவை முயக்கு.
1108. வீழு மிருவர்க் கினிதே வளியிடை
         
போழப் படாஅ முயக்கு.
1109. ஊட லுணர்தல் புணர்த லிவைகாமங்
         
கூடியார் பெற்ற பயன்.
1110. அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ்
         
செறிதோறுஞ் சேயிழை மாட்டு.