1111. நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு
         
மென்னீரள் யாம்வீழ் பவள்.
1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்
         
பலர்காணும் பூவொக்கு மென்று.
1113. முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்
         
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
1114. காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு
         
மாணிழை கண்ணொவ்வே மென்று.
1115. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
         
நல்ல படாஅ பறை.
1116. மதியு மடந்தை முகனு மறியா
         
பதியிற் கலங்கிய மீன்.
1117. அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல
         
மறுவுண்டோ மாதர் முகத்து.
1118. மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்
         
காதலை வாழி மதி.
1119. மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்
         
பலர்காணத் தோன்றன் மதி.
1120. அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத
         
ரடிக்கு நெருஞ்சிப் பழம்.