1121. பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
         
வாலெயி றூறிய நீர்.
1122. உடம்பொ டுயிரிடை யென்னமற் றன்ன
         
மடந்தையொ டெம்மிடை நட்பு.
1123. கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழுந்
         
திருநுதற் கில்லை யிடம்.
1124. வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத
         
லதற்கன்ன ணீங்கு மிடத்து.
1125. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே
         
னொள்ளமர்க் கண்ணாள் குணம்.
1126. கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருகுவரார்
         
நுண்ணியரெங் காத லவர்.
1127. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு
         
மெழுதேங் கரப்பாக் கறிந்து.
1128. நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட
         
லஞ்சுதும் வேபாக் கறிந்து.
1129. இமைப்பிற் கரப்பாக் கறிவ லனைத்திற்கே
         
யேதில ரென்னுமிவ் வூர்.
1130. உவந்துறைவ ருள்ளத்து ளென்று மிகந்துறைவ
         
ரேதில ரென்னுமிவ் வூர்.