களவியல்

114. நாணுத்துறவுரைத்தல்

( நாணம் துறந்தமையை கூறுதல் )

1131. காம முழந்து வருந்தினார்க் கேம
          மடலல்ல தில்லை வலி.

1132. நோனா வுடம்பு முயிரு மடலேறு
          நாணினை நீக்கி நிறுத்து.

1133. நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன்
          காமுற்றா ரேறு மடல்.

1134. காமக் கடும்புன லுய்க்குமே நாணொடு
          நல்லாண்மை யென்னும் புணை.

1135. தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு
          மாலை யுழக்குந் துயர்.

1136. மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற
          படலொல்லா பேதைக்கென் கண்.

1137. கடலன்ன காம முழந்து மடலேறாப்
          பெண்ணின் பெருந்தக்க தில்.

1138. நிறையரியர் மன்னளிய ரென்னாது காம
          மறையிறந்து மன்று படும்.

1139. அறிகிலா ரெல்லாரு மென்றேயென் காம
          மறுகின் மறுகும் மருண்டு.

1140. யாம்கண்ணிற் காண நகுப வறிவில்லார்
          யாம்பட்ட தாம்படா ஆறு.