1221. மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும்
         
வேலைநீ வாழி பொழுது.
1222. புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல்
         
வன்கண்ண தோநின் றுணை.
1223. பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனிஅரும்பித்
         
துன்பம் வளர வரும்.
1224. காதல ரில்வழி மாலை கொலைக்களத்
         
தேதிலர் போல வரும்.
1225. காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொல்யான்
         
மாலைக்குச் செய்த பகை.
1226. மாலைநோய் செய்தன் மணந்தா ரகலாத
         
காலை யறிந்த திலேன்.
1227. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
         
மாலை மலருமிந் நோய்.
1228. அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன்
         
குழல்போலுங் கொல்லும் படை.
1229. பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு
         
மாலை படர்தரும் போழ்து.
1230. பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை
         
மாயுமென் மாயா உயிர்.