1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி
         
நறுமலர் நாணின கண்.
1232. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
         
பசந்து பனிவாருங் கண்.
1233. தணந்தமை சால வறிவிப்ப போலு
         
மணந்தநாள் வீங்கிய தோள்.
1234. பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
         
தொல்கவின் வாடிய தோள்.
1235. கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு
         
தொல்கவின் வாடிய தோள்.
1236. தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்
         
கொடிய ரெனக்கூற னொந்து.
1237. பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க் கென்
         
வாடுதோட் பூச லுரைத்து.
1238. முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது
         
பைந்தொடிப் பேதை நுதல்.
1239. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
         
பேதை பெருமழைக் கண்.
1240. கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே
         
யொண்ணுதல் செய்தது கண்டு.