1281. உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
         
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
1282. தினைத்துணையு மூடாமை வேண்டும் பனைத்துணையுங்
         
காமம் நிறைய வரின்.
1283. பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்
         
காணா தமையல கண்.
1284. ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து
         
கூடற்கட் சென்றதென் னெஞ்சு.
1285. எழுதுங்காற் கோல்காணாக் கண்ணேபோற் கொண்கன்
         
பழிகாணேன் கண்ட விடத்து.
1286. காணுங்காற் காணேன் றவறாய காணாக்காற்
         
காணேன் றவறல் லவை.
1287. உய்த்த லறிந்து புனல்பாய் பவரேபோல்
         
பொய்த்த லறிந்தென் புலந்து.
1288. இளித்தக்க வின்னா செயினுங் களித்தார்க்குக்
         
கள்ளற்றே கள்வநின் மார்பு.
1289. மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்
         
செவ்வி தலைப்படு வார்.
1290. கண்ணிற் றுனித்தே கலங்கினாள் புல்லுத
         
லென்னினுந் தான்விதுப் புற்று.